முகப்பு

காளைத்திகைப்பான் குறள்-புல்டோசர் பாபா அருளால்

வெள்ளிக் கிழமை கல்லெறியின் சனிக்கிழமை 
கல்கல்லாய் உதிருமுன் வீடு.                           1

கல்லறியார் கல்லெறியின் எறிந்தவன்தன் வீடு 
கல்கல்லாய் ஆகும் நாளை                               2

கலவரத்தைச் செய்து நிலவரத்தை நீமாற்றில் 
நாளை காளைத்திகைப்பான்  வரும்             3

அறுவார் உசுப்பேற்றி அறியாமல் நீயெறிந்த 
கல்லாக மாறுமுன் வீடு                                       4

எறிவர் மகிழ்வர் கலம்செய்து களித்திருப்பர் 
மறுநாளே மனம் வருந்துவர்                             5

காளைத் திகைப்பான் வேலை தொடங்குகையில் 
கலங்கிவிடும் கலவரன் மனம்                          6

கலவரன் வீடு கல்லாகும் என்றறியின் 
கல்தொடவே கைகள் நடுங்கும்                        7

கலகத்தைத் தூண்டி சிதைத்தவன் சொத்தெதுவோ 
ஏலத்தே ஏறி விடும்                                                8

கலவரம் செய்துவிட்டு மனதளவில் மகிழ்ந்தநாளை 
காளைத் திகைப்பான் வரும்                              9

காளைத் திகைப்பான் காலனாய் வராதிருக்க 
கலகங்கள் செய்யா இரு                                    10

(அருஞ்சொல்: காளைதிகைப்பான்-புல்டோசர்)

Ourhome Div Pictures, Images and Photos

0 கருத்துகள்: