முகப்பு

சூடு சொரனை உள்ள ... தமிழர்களே... சிந்திப்பீர்!

இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம். (அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்) ---- மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு


நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது ---- காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி (அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)


ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய 'இந்தி'யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!


நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது? நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் 'இந்தி' அரசுதானே?


சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!


நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன! தமிழனின் சொரனை எங்கே போனது? உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவைப்படுக்கிறார்.


பாகிஸ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவைபடுகிறார்கள். கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!


ஆக, இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என. தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள்தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.


இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும்.


'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கே? வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்!


சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்'சிங்கு' தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன? ஆரியன் சிங்களவனின் பங்காளி!


ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்? சூடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!
Ourhome Div Pictures, Images and Photos

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ?

தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை

ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ?

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்தானை ஓட ஓட விரட்டி...

5. மல்லாக்க படுத்து மாளவிகாவை பற்றி கனவு கண்டால் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற மாபெரும் கருத்தை சொன்ன அப்துல்கலாம் என்ற இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கி பார்த்துள்ளோம்..

6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை சுரண்டி ஆந்திரம், கருநாடகம், கேரளம் என்று எல்லா மாநிலங்களுக்கும் கரண்டு அனுப்புகிறோம்...என்ன அவனுங்க தான் காவேரி, கிருஷ்ணா, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தண்ணி தரமாட்டேங்குறானுங்க...எங்களுக்கு என்ன கவலை, கடல்நீரையே குடிநீராக்குவோம் தெரியுமா ?

7. வெளிநாட்டு படையினர் எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்கும் அளவுக்கு எஜுகேஷனில் உயர்ந்துள்ளோம்...என்ன ஒன்று, எங்கள் ராணுவ வீரர்கள் தான் கொஞ்சம் காய்ந்துபோய், இலங்கையில், ஆப்ரிக்க நாடுகளில் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்...லீவ் தட் யா..

8. குட்டி மாநிலமான காட்ஸ் ஓன் கண்ட்ரி கேரளாவில் இருந்து இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் பொறுப்புகளில் உள்ள நாராயணன், மேனன், அந்தோனிகளை நியமித்துள்ளோம்..உங்களுக்கும் அப்படி ஒன்னு கிடைக்காமலா போயிரும் ?

9. அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்துக்கு தனி துறை, தனி அமைச்சு. அங்கிருந்து வரும் தேயிலையை நாங்க டீ போட்டு குடிக்கிறோம். என்ன ஒன்று, அருணாச்சல பிரதேசம் என்ற எங்கள் நாட்டு மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடுது...பரவால்ல...

10. காஷ்மீர் என்ற மாநிலத்துக்கு தனி உரிமை கொடுத்துள்ளோம்...இங்க தக்காளி நாப்பது ரூவா கிலோ என்றால் அங்க ஐந்து ரூபா. எந்த டேக்ஸும் கிடையாது. ஆனா அங்கே வாக்கெடுப்பு நடத்தாமல் இதுவரை லூலூவாயி காட்டிட்டோம்...சூப்பரு இல்ல ?

11. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவும் நாடு இது. என்ன ஒன்று பெல்காம் தனக்கு தான் சொந்தம்னு கர்நாடகமும், மகாராட்டிரமும் அடிச்சுக்கிது...

12. மக்கள் ஆதரவு இருந்தா புது மாநிலமே உருவாக்குவோம் தெரியுமா ? உத்ராஞ்சல், சட்டீஸ்கர் எல்லாம் உதாரணங்கள்...என்ன தெலுங்கானாவுல மட்டும் கொஞ்சம் ஏமாத்துறோம்..

13. எங்க நாட்டுல இருக்கிற அம்பானிகளோட சொத்தை கணக்கு போட்டா உலக பணக்காரரை விட அதிகம் தெரியுமா ? என்ன, அது கொஞ்சம் சாதாரண மக்கள் வயித்துல அடிச்ச காசு. டோண்ட் கேர் ப்ளீஸ்..

14. 400க்கும் மேல எங்க நாட்டு மீனவர்களை அடுத்த நாட்டு கடற்படை சுட்டு கொன்றபோதும், எதுவும் பேசாம அமைதியா இருக்க காந்தி பொறந்த நாடு..இந்த உதாரணம் போதாதா ? இந்த நாடு எவ்ளோ அமைதி நாடுன்னு ?

15. கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்துக்கு பலியா இரண்டாயிரம் இஸ்லாமியர்களை போட்டு தள்ளினோம். இதில் இருந்தே தெரியலயா ? இது எவ்ளோ வீரம் சொ(செ)றிந்த நாடு...

16. பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் ஓதுன பாங்கு சத்தம் பிடிக்கலைன்னு தெரிஞ்சவுடனே, ஒரு மசூதியையே இடிச்சோம் தெரியுமா ? பாபர் கட்டுனா என்ன அக்பர் கட்டுனா என்ன ? மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

இந்த நாட்ல ஜாயின் ஆகிக்கோங்க...உங்களுக்கு தகவல் தொடர்பு மந்திரி பதவி தறோம். நல்லா சம்பாதிச்சுக்கோங்க ? ஓக்கே ?
Ourhome Div Pictures, Images and Photos

ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது....
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...
அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும்
முடியவில்லை...
வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்
இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும்
குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு ஒன்றும்
நடத்தப்பட்டது
அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....
எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........
பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....
நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...
இதப் பிடிக்க மாட்டமா.... எகத்தாளமாக...
சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...
நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவை கண்ட காட்சி.............
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு
கூறிக்கொண்டிருந்தனர்
"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"
உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?
அதற்கு பன்றி
"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25
வருடமா இதைத்தான்
பண்றாங்க" என்றது சிரித்தவாறு
Ourhome Div Pictures, Images and Photos

உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!

இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன்.
எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு,

உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லரியாலும் அடித்து நூற்ருயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.
மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா ! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.

தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை.இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துகுமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.

சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள்.ஆனால் நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா.

இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாக பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!

உங்கள் கைகள் தான் கறை படியாதவை
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்

ஓயாது ஒலியுங்கள்
நீங்கள் ஓய்ந்தால்
நாங்கள் வீழ்வது மட்டுமல்ல
நாளை இருக்கவும் மாட்டோம்

இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.

கந்தக காற்றதனே சொந்தமென ஆகி
கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி
வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்
வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம் எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழர் சார்பில்
நான்
Ourhome Div Pictures, Images and Photos