சிற்றின்ப மயக்கில் பேரின்பப் பொருள்கொண்டு
சுற்றம்துகில் மறந்து உடைபொருளும்தமைத் துறந்து
குறியொடுகுறி சேர்த்துக் குழவிக்குப்
பொருள்சேர்த்து
அறிவொன்றும் அறியாப் பிறந்ததோர் பிறப்பு.
பிறப்புக் கொடியறுத்து உடல்பிரித்து முறைவகுத்து
அப்பனென ஆள்காட்டி அடுத்தவர்க்கும் வகைகாட்டி
சுற்றமும் சாதியும் சூழ்நின்றோர் சிந்தனையும்-இட்டவழி
பெற்றான் பெயர்கொண்டான் நான் என்றான்.
தான்கொண்ட குறிகொண்டு ஆணென்று வகைகண்டு
ஆண்கொள்ளாக் குழிகண்டு பெண்ணென்று நகைகொண்டு
முன்பாலோடும் ஆளோடும் பாரிலுள்ளோர் வகுத்தசட்டம்
–தன்
நெஞ்சோடு நிலைசெய்துதன் பின்வாழ்வை
பிழைசெய்தான்.
செயலறியாப் பருவத்தே செய்யறியாப் பயிர்போல
மயிலுதிர்ந்த இறகாக மலைசொரிந்த மணலாக
மையலென மனமுதிர்ந்து பார்வையிலே கதைபகிர்ந்து
காதலென வருந்தி கல்பனையை உருத்தரித்தான்.
உருஅறியா உள்ளத்தை மெய்யென்று தினந்தேடி-உள்ளம்
உருக்குலைந்து சிந்னையும்கெட்டழிந்து மாதுக்கு
மனமிரங்கி
ஊருக்கும் பழியிறைஞ்சி காதலெனச்சொல்லி
காயத்தையும்வருத்தி
போருக்கும் ஆள்செய்தான் பேருக்கும்
பாழ்செய்தான்.
பாழான உள்ளமது பார்வைக்கு பழிகிடக்க ஏங்கி மனம்
கீழான பள்ளமதை உள்ளமெச்ச மாயக் குலைக்கேங்கி
மீளாத மனம்நோக கண்நோக்கிக் காத்திருந்து
மெய்வாழ்வை பொய்செய்தான்