முகப்பு

தமிழ்சித்தன் பாடல்கள்

எனக்குள்ளே ஒருவனல்லலன் பலருள்ளன் அவற்றில் ஒருவன் தமிழ்ச்சித்தன், அவன் எழுதிய பாடல்களில் சில.....


கழுத்திறக்க சட்டையிட்டு கைவைத்து மறைத்து

கால்குட்டை சட்டைபோட்டு கைப்பையால் மறைத்து

இடைதெரிய உடைஉடுத்தி இழுத்திழுத்து விட்டு

இவைசெய்யும் செயல்என்ன பரத்தமையோ பராபரமே! 1



எச்சில்தசை தனைப்பகிர்ந்து முத்தமென்று முயங்குகின்றார்

கழிகுழியில் கால்நனைத்து கலவியென்று கலங்குகின்றார்

நீர்த்தசையில் நினைவிழந்து நிலைகெட்டு நிற்குகின்றார்

சீர்த்திசையில் செயல்உணரும் நாள்என்ன நமன்நாளோ? 2



பெண்பேச்சில் பேதலித்து பேதமைகள் மிகவளர்த்து

நல்கூட்டம் தனைவிடுத்து நாரியர்பின் நலிந்துழன்று

பரத்தமைக்கு பாழாகும் சதைமயக்கச் சண்டாளர்- நாளை

மதிதெளிந்து மனங்கலங்கி தமைநோகாரோ தாண்டவனே! 3



கற்பென்றும் கண்மையென்றும் காலிடுக்கில் கதைசொல்லுவார்

கண்ணறியா கற்புகொல்லும் கடவுளையும் வெல்லுமென்பார்

கண்மூடி கருத்தேற்றா கடைந்தெளிந்து சொல்லுமாக்கால்

கவட்டிடுக்கில் கற்பில்லை கப்பொன்றே மெய்யென்பேனே! 4



இடைகாட்டி மயக்கிடுவார் திரண்டுருண்ட தொடைகாட்டி மயக்கிடுவார்

நடைகாட்டி மயக்கிடுவார் திரள்கொங்கை மடைகாட்டி மயக்கிடுவார்

கண்காட்டி கதைபேசி தோல்காட்டி விலைபேசி மயக்கிடுவார்மயங்கிடுவார்

உடன்கொண்ட இளமை உடல்விட்டுபோகின் பின்என்செய்வார் பரனே? 5



Ourhome Div Pictures, Images and Photos