முகப்பு

கொழும்பில் பூமி அதிர்ச்சி- சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.(இலங்கை நேரம் 3.30 அதிகாலை)
கடல்மட்ட உயர வாசிப்புகளில் சுனாமி அலை உருவாகுவது அவதானிக்கப்படாமையால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மக்கள் வெளியேறத்தேவை இல்லையென்றும் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை
இன்று(6/13/2010) அதிகாலை இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.7 பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இலங்கை பூராவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஏற்பட்ட பூமிஅதிர்வை தொடர்ந்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் சுனாமி எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. கடலுக்கு அருகில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
பூமி அதிர்வு 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மீண்டும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று  பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
அதிர்வு ஏற்பட்ட இடம் மையப்பகுதி- படம்
இலங்கையில் கண்டி, அனுராதபுரம், பதுளை,கொழும்பு ஆகிய இடங்களில் அதிர்வு உணரப்பட்டுள்ளது..

தொடர்புடைய செய்தி
இன்று(6/13/2010) அதிகாலை 12.55 மணியளவில் கொழும்பில் பூமி அதிர்வு உணரப்பட்டு மக்கள் அச்சத்தில் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நீண்ட நேரம் காத்திருந்தும் மீண்டும் அதிர்வெதுவும் தென்படாததால் மக்கள் வீடுகளுக்கு அச்சத்துடனேயே திரும்பினர். இது நான் ஆடிக்கொண்டு போடுறேனுங்க.... உங்க ஊருகள்லயும் ஆடிச்சுதாங்க....(எப்பிடி ஒரு நல்ல மனசு பாத்திங்களா உங்க ஊரும் ஆடணுன்னு..)

LOCATION         FORECAST POINT     COORDINATES     ARRIVAL TIME
இந்தியா           GREAT NICOBAR       7.1N  93.6E    1953Z 12 JUN
                  LITTLE ANDAMAN     10.7N  92.3E    2010Z 12 JUN
                  NORTH ANDAMAN      13.3N  92.6E    2038Z 12 JUN
                  PORT BLAIR         11.9N  92.7E    2101Z 12 JUN
இந்தோனேசியா    BANDA ACEH          5.5N  95.1E    2022Z 12 JUN
                  SIMEULUE            2.5N  96.0E    2039Z 12 JUN
                  BELAWAN             3.8N  98.8E    2314Z 12 JUN
 இலங்கை        TRINCOMALEE         8.7N  81.3E    2109Z 12 JUN
                  Colombo
Anuradapura 
                  Badulla
                  Kandy
பர்மா            PYINKAYAING        15.9N  94.3E    2124Z 12 JUN
                  MERGUI             12.8N  98.4E    2230Z 12 JUN
                  YANGON             16.5N  96.4E    2323Z 12 JUN
 தாய்லாந்து       PHUKET              8.0N  98.2E    2139Z 12 JUN
                  KO PHRA THONG       9.1N  98.2E    2207Z 12 JUN
                  KO TARUTAO          6.6N  99.6E    2254Z 12 JUN
 மலேசியா        GEORGETOWN          5.4N 100.1E    2329Z 12 JUN 
 
 
 
Ourhome Div Pictures, Images and Photos

என்குறள்

ஏங்க வள்ளுவரும் ஔவ்வையாரும் தான் குறள் எழுதலாம் மற்றவங்க யாரும் எழுத கூடாதுன்னு ஒன்னும் பிரச்சனை இல்லையே... அதால நான் செய்த முதற் குறள் முயற்சி, எழுதி நீண்ட நாள் ஆயிற்று ஆனா பதிவில போடலை. இப்ப போடுறன் படிச்சிட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க......



குறிபார்க்கா எய்த அம்பினை ஒத்த
எண்ணா எடுத் துரைப்ப. 1

இடம் கொடின் நன்மை கடிதாம்
எண்ணம் தீது எனின். 2

தவறென்று காண் இன்கூற வஞ்சேல்
தீதற்ற சொல் ஆல். 3

வெறுமை கண்டு உழல் உம்வாழ்க்கை
உடன் நலன் கெடின். 4

வரல் வேண்டுசொற்கள் வாயிருந் தல்ல
இதயத்து இல் இருந்து. 5

துன்பத்திற் துன்பம் துன்பம் தனையெண்ணி
உள்ளத்துட் தோன்று பயம். 6

உள்ளத்து வலிமை கூட்டு துன்பம்
உழைப்ப துடலை ஒப்ப. 7

உழைப் பன்றி யில்லை யார்க்கும்
எங்கு முழு வெற்றி. 8

அளிக்கு முறை மிக்க மதிப்புடை
அளிக்கு பொருள் இலும். 9

மக்கட்கு மாறுநீ தொண்டனாய் ஆவர்
அவ்வா ஏயவர் உனக்கு. 10

பிறர்க் குணர்த்தும் தமை தாமவர்கட்கு
செய்யும் செயல் நின்று. 11

உடை நடைபண்பு மூன்று சிறந்தது
எளிமை அதன் இலும். 12

சதுரங்கம் போல வெற்றி தருமுன்
எண்ணம் நல்வாழ் இல். 13

பெரியோர் பெருந் தன்மைகாண் எளியோரை
நடத்து அவர் தன்மை. 14

திறமை வெல் ஆற்றல்நிலை ஆன
பயில் தனிற் குண்டு. 15

எண்ணுவர் எண்ணத்து பொருள் தரு
மவர் செய்யும் செயல். 16

துணிவு வீரம் அறிவொக்க தரும்
தேர்ந்த தன்முன் முயற்சி. 17

துன்பத்தில் இன்பம் கொள்ளல் என்ப
இயல் ஆவோர் செயல். 18

எண்ணம் களைதல் இன்பம் பயக்கும்
தேவை அற்ற தெனின். 19

நல்லோர் உளமென்ப வேண்டு நிலைத்த
கறையற்ற கண்ணாடி ஒப்ப. 20

தானே தான் நிற்கை நன்று
அவன் தன் பலத்து. 21

பொருள் சிறிதுடையார் வறியர் அல்லர்
மிகு பொருள் வேண்டுவரே. 22

நல் தொழிலான் ஆக்குவதாம் அவனை
தான் கற்ற கல்வி. 23

கல்லென்ப கடிததனில் கடிதுகற்ற கல்
அதை மறப்ப தென்ப. 24

தாமெதுவாய் இருப்ப தென்பதாம் தம்
மெய்ச் செல்வ மென்ப. 25

எப்பழக்க முஞ்சிலந்தி வலையாம் முதல்
இரும்பாகு மது பின். 26

வெல் சொல்லில் தேர்ந்தான் வழக்குரைஞன்
அவனில் தேர்ந்த்து பணம். 27

மாற்றனை விட தீயன் திருடன்
பொய்யன் அவன் இலும். 28

உழைப்பு ஊக்கம் உயர்வுதரும் அன்றி
வீண்ஆ யின்காலம் இழப்ப. 29

போதளவு கற்றவர் நல்வாழ் வாழ்வர்
மற்று அவர் கல்லாதார். 30

செய்யெண்ணு செயலை உடன்செய் நன்று
நன்றன்று செய்யா இரு. 31

வெற்றியது எளிது ஒன்றாகி விட்டால்
சிந்தை உடன் செயல். 32

எண்ணு செயல் கைகூடும் செயற்பட்டால்
காலம் பலம் அறிந்து. 33

சிந்தித்தல் நன்மைதரும் பிறர் கூறுமேன்மை
அறி வுரை கேட்டு. 34

இகவாழ்வு அடை இன்பம் என்ப
மேகத்து நிழல் ஒப்ப. 35

துன்பத்து துணிச்சல் கொள் தோழன்
தோன்றி இருப்ப தந்தலை. 36

அறிவாளன் முதலில் செய்து இருப்பன்
மூடன் செய் ஈற்று. 37

திறனொடு நம்பிக்கை உள்ளுள்ளன் வெல்லரிய
படையுடை நாட்டிற்கு ஒப்ப. 38

இருவிழி அழுக்கினை அழுக்கற நீக்கின்
இருப்பவை எல்லாம் அழகு. 39

புயலினிற் கசையா நிலந்தொடு பெருமலை
புகழ்தனிற் கவ்வாறே அறிவு. 40



மேலுள்ள 40 குறள்களும் தமிழன்பன் எனப்படும் வருண்ஜீவ் ஆகிய என்னால் எழுதப்பட்டு பதிப்புரிமை பெறப்பட்டது..
Ourhome Div Pictures, Images and Photos