மோட்சம் அடைய தகுதியானவர்கள் யார்? தமிழர் வாழ்வியல் கூறுவது என்ன?
அறவழியில் வாழ்க்கை நடாத்தி அதன்மூலம் பொருளீட்டி வாழ்வின் இன்பங்களை அனுபவித்தவர்கள் மட்டுமே வீடுபேறு எனும் மோட்சத்தை அடையும் தகுதி வாய்ந்தவர்கள் என்று தமிழர் வாழ்வியல் கூறுகின்றது.
அதனால்தான் தமிழர்கள் தம் வாழ்வியலை அறம் பொருள் இன்பம் வீடு என்று வகுத்தார்கள்.
தமிழர்கள் ஒருபோதும் சோம்பலில் உழைப்பின்றி வாழும் ஏழ்மையை ஆதரிக்கவில்லை.
நேர்மையான வழியில் பொருளீட்ட ஊக்குவித்த தமிழ்ச் சமூகம் உழைப்பின்றி அடுத்தவரிடம் கையேந்துவதை அனுமதிக்கவில்லை.
மனித வாழ்வில் இன்பம் என்று கருதும் விடயங்களை நேர்மையான வழியில் துய்ப்பதை தமிழர் பண்பாடு ஒருபோதும் தடுத்ததில்லை.
இவ்வாறு வாழ்வியல் இன்பங்களை அனுபவித்து கடந்தவர் மாத்திரமே வீடுபேற்றிற்காக இறைவனை நோக்க தகுதியானவர்கள் என்று தமிழர் வாழ்வியல் கூறுகின்றது.
அதனால்தான் தமிழர்கள் தம் வாழ்வியலை கொண்டாட்ட மயமாக கட்டமைத்தார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாட்டத்துடன் வாழ்ந்தார்கள்.
இவை எல்லாம் இந்து வாழ்வியலைப் பின்பற்றும் மக்களிடம் மாத்திரமே சாத்தியம் ஆகின்றது..
அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம்..
இந்து மட்டுமே தமிழன்..!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக