குலம்விட்டுப்போன சதைமயக்கச் சண்டாளி குணம்கெடுத்தாளோ- அவள்
குணம்கெடுத்த சண்டாளன் பெண்டுகள்போல் சொண்டுரசி குணமறுத்தானோ
கால்விழுந்து கைபிடித்து கால்வாரிவிட்டவள்தான் கலக்கிவிட்டாளோ- மனதை
இழிவர்வழி விட்டவர்கள் வாழ்ந்தில்லை மாழ்ந்தென்று மனமுணராயோ!
தனக்குவாய்த்த பெண்டிர் தாசியென்று ஆகிவிடில் -தரணிதனில்
தாசிமட்டும் வேண்டுமென்று தவம்மிக வளபர்ப்பேனோ
தாயொடு தங்கையையும் தாசியென்றும் விழிப்பேனோ-இவர்கள்
உடல்விற்கும் நிலைவருங்கால் என்பெண்டிர் உசத்தியன்றோ!
உடல்விற்கும் பெண்மட்டும் தாசியென்னா வேதம்காண்- தான்
பெண்ணென்று பேதம்சொல்லி பெறும்பேறு அத்தனையும்
வேசியென்று வேதம்சொல்லும் காதலென்றும் அதுதானே
கட்டிலொடு காமங்கொல்லும் காலங்கொல்லாய் காலனே!
தாய்வயிறு பசித்திருக்க தாரத்தொடு புசித்திருப்பேன்
உறவுகள் தவித்திருக்க ஊர்மாடத்து விழாவெடுப்பேன்
உடற்பசிக்காய் குலம்விட்டு குணம்பிறழ்ந்த சண்டாளன் –என்
குணம்மாறும் என்றெண்ணல் எந்ஞாயம் ஞானவோனே?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக